மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் குவிந்திருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு - வியாபாரிகள் குற்றச்சாட்டு
Oct 28 2020 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் குவிந்திருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மலர்ச்சந்தையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை நடைபெறும். மலர் கழிவுகளை உர தயாரிப்புக்கு பயன்படுத்தும் நிலையில், தற்போது மழை பெய்துவருவதால், மழைநீருடன் மலர் கழிவுகள் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள கழிவறையும் செயல்படாததால், சந்தைக்குவரும் பொதுமக்கள் திறந்தவெளியில் கழிப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.