குமளங்குளம் பஞ்சாயத்து தேர்தல் சர்ச்சை - ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Oct 28 2020 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் குமளங்குளம் கிராம பஞ்சாயத்து தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றதாக ஒருவாரத்தில் அறிவிக்க வேண்டுமென மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயலட்சுமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜயலட்சுமியைக் காட்டிலும் 34 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜெயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலட்சுமி வெற்றிபெற்றதாக அறிவிக்க, மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.