இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைக் அரசு கைவிடக்கூடாது - பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
Oct 28 2020 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவலைக் காரணம் காட்டி இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசு கைவிடக் கூடாது என, பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. அன்புமணி வலியுறுத்தியுள்ளார். நடப்புக் கல்வியாண்டு நிறைவடைய இன்னும் 6 மாதங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், கொள்முதல் பணிகளை உடனடியாகத் தொடங்கி பொங்கல் திருநாளுக்குள் மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.