திருநங்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடனடியாக சட்டம் இயற்றவேண்டும் - சமூக ஆர்வலரான திருநங்கை சுதா வலியுறுத்தல்
Oct 28 2020 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநங்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலரான திருநங்கை சுதா தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளுக்கு எதிராக நடைபெறும் கொலை உள்ளிட்ட தாக்குதலுக்கு நீதி வழங்கக்கோரியும், திருநங்கைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், சென்னை சேப்பாக்கத்தில் திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமூக ஆர்வலரான திருநங்கை சுதா, தமிழகத்தில் திருநங்கைகளின் படுகொலைகள் அதிகரித்துள்ளதால், தங்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும், இதனால் திருநங்கைகள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.