புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளரை போலீசார் கைது
Oct 28 2020 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். நாகுடி பகுதியில் இயங்கி வரும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிரபாகரன் என்ற விவசாயி, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக, தடையில்லா சான்று கோரியுள்ளார். அதற்கு, உதவி பொறியாளர் தென்னரசு, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில், லஞ்சம் பெற முயன்ற உதவி பொறியாளர் தென்னரசை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.