திருத்தணி அருகே கஞ்சா விற்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு
Oct 28 2020 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருத்தணி காவல் நிலையம் அருகே கஞ்சா விற்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, டிஎஸ்பி அலுவலகத்தில், பெண்கள் புகார் மனு அளித்தனர். அதில், இந்திரா நகரில், குப்பன் என்பவர், பல மாதங்களாக கஞ்சா விற்பதாகவும், இதுகுறித்து திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து, திருத்தணி பொறுப்பு டிஎஸ்பி துரைபாண்டி உத்தரவின்பேரில், திருத்தணி ஆய்வாளர் ரமேஷ், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.