சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கியது
Oct 28 2020 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு, அரசுப் பேருந்து சேவை தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால், ஏற்காட்டிற்கு கடந்த 7 மாதங்களாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவை தொடங்கியது. முதற்கட்டமாக 3 அரசுப் பேருந்துகள் ஏற்காட்டிற்கு இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்கேற்ப படிப்படியாக பேருந்து சேவை அதிகரிக்கப்படும் என, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.