உதகை அருகே தாலி கட்டும் சமயத்தில் காதலன் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - சமூக வலைதலங்களில் வைரலாகும் வீடியோ

Oct 31 2020 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் உதகை அருகே, தாலி கட்டும் சமயத்தில் காதலன் வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உதகை அருகே மட்டகண்டி கிராமத்தை சேர்ந்த திரு.அனந்த் என்பவருக்கும், துனேரி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்‍கும், கடந்த 29-ம் தேதி மஞ்சூர் அருகே மட்டகண்டி கிராமத்தில் திருமணம் நடைபெற நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. திருமணத்திற்காக பெண் வீட்டாரும், மணமகன் வீட்டாரும் கூடினர். இதையடுத்து, தாலி கட்டும் நேரமும் வந்தது. அப்போது, திடீரென பிரியதர்ஷினியின் காதலன் பார்த்திபன் மண்டபத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து, மணமேடையில் இருந்து எழுந்த பிரியதர்ஷினி, தனது காதலன் தன்னை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகக்‍கூறி, திருமணத்தை நிறுத்தினார். பெற்றோர் அறிவுரை கூறியும் அதனை பிரியதர்ஷினி ஏற்கவில்லை. தாலி கட்டும் சமயத்தில் காதலன் வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதலங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00