கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் தோற்றதால் நிகழ்ந்த விபரீதம் - தனியார் வங்கி ஊழியர் மனவிரக்தியில் தற்கொலை
Oct 31 2020 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழப்போர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான மதன் குமார், ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டி மூழ்கிப்போனார். தொடக்கத்தில் பணம் கிடைத்ததால் மகிழ்ச்சியான அவர், தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டு பணத்தை இழந்ததால், விரக்தியடைந்த மதன்குமார், குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதன் உச்சகட்டமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.