தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம் : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்
Oct 31 2020 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம் என, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. வைகோ வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ள பா.ஜ.க. அரசின் சதித் திட்டங்களை வேரோடு சாய்ப்பதற்கு தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம் என்றும், தமிழ்நாட்டின் மரபு உரிமையையும், மொழி, இன உரிமை மற்றும் மாநில உரிமைகளை நிலைநாட்டுவோம் என்றும் திரு. வைகோ தெரிவித்துள்ளார்.