வேளாண் கடன்களுக்கான வட்டி சலுகை ரத்து முடிவை மத்திய நிதியமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Oct 31 2020 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் கடன்களுக்கான வட்டி சலுகை ரத்து முடிவை மத்திய நிதியமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மற்றவர்களுக்கு அளித்த கூட்டுவட்டி தள்ளுபடி சலுகையை போல், விவசாயிகளுக்கும் அளிக்க வேண்டும் என்றும், அரசின் சலுகையை பெற அவர்களுக்கு முழு தகுதியும், உரிமையும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.