வங்கக்கடலில் நாளை காலை உருவாகிறது புரெவி புயல் - தென்காசி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை
Dec 1 2020 1:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார். இந்தப் புயல் மேற்கு வடமேற்கு திசையில், நாளை மாலை அல்லது இரவில் இலங்கையைக் கடந்து, மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்றும், இதன் காரணமாக தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.