தென்மாவட்டங்களில் 4ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை : மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அரசு வேண்டுகோள்
Dec 1 2020 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்மாவட்டங்களில் இன்றுமுதல் வரும் 4ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாநிலத்தின் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், அந்தந்த மாநிலங்களின் கரையை அடைய அனுமதிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.