தேனி மாவட்டத்தில் குளத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அழித்து வருவதாக புகார் - மாவட்ட ஆட்சியரிடம் பகுதிவாசிகள் மனு
Dec 1 2020 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் போடி அருகே, தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த குளத்தை மீட்டுத் தர வேண்டி, கூழையனூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
போடி அருகே, கூழையனூர் ஊராட்சி பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, கடந்த 1992-ம் ஆண்டு நல்லுச்சாமி என்பவர், தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 70 சென்ட் நிலத்தை தமிழக அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதனை அப்பகுதியினர் மழைநீரை தேக்கி வைத்து நீர் குட்டையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அந்த குளத்தை அழித்து வருவதாக கூழையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாலதிமுத்து தலைமையில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.