வாகனங்களுக்கு எஃப்.சி. வழங்குவதற்கு போக்குவரத்துத் துறையில் மெகா வசூல் நடப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Dec 1 2020 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாகனங்களுக்கு எஃப்.சி. வழங்குவதற்கு, தனியார் நிறுவனங்கள் மூலம் போக்குவரத்துத் துறையில் மெகா வசூல் நடப்பதாக திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.