திருச்சியில் அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனை : சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து கருத்துக் கேட்பு
Dec 1 2020 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் அ.ம.மு.க தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.ஜெ. சீனிவாசன் தலைமையில், சட்டமன்றத் தேர்தல் பணிக்கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம், ஏர்போர்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திரு.ஆர்.மனோகரன், கழக அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி, கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.வேலு. கார்த்திகேயன், கழக அமைப்புச் செயலாளர் திருமதி.சாருபாலா தொண்டைமான், கழக செய்தி தொடர்பாளர் திரு.அதி.வீரராமபாண்டியன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். கழக இளைஞர் பாசறை தலைவர் ஜோதிவாணன், கழக ஓட்டுநர் பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் திரு.பழனி மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.