கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு - நிலத்தடி நீர் செறிவூட்டுதல் தடைபடும் என எச்சரிக்கை
Dec 1 2020 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் தடைபடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியுள்ளனர்.
கீழ்பவானி அணையின் மூலம் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் ஒரு பகுதியாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் கீழ்பவானி பாசன கால்வாய் திட்டத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. கால்வாயை நவீனப்படுத்துதல் என்ற பெயரில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.