திருச்சியில் தனியார் வங்கியில் பணத்தை திருடிச்சென்ற பெண் - சிசிடிவி பதிவை வைத்து கைது செய்த போலீசார்
Dec 1 2020 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், தனியார் வங்கியில், பெண் ஒருவர், பணத்தை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. எடமலைப்பட்டி புதூரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில், கடந்த 10ஆம் தேதி, பொதுமக்கள் செலுத்திய பணத்தை, காசாளர் எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண், அவரிடம் பேசியபடியே நின்றிருந்தார். பின்னர், அந்த பெண்மணி அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், 74 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்ததால், வங்கி நிர்வாகம் சார்பில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிசிடிவி பதிவை போலீசார் ஆய்வு செய்தபோது, காசாளரிடம் பேசிக்கொண்டிருந்த பெண், பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வங்கியில் திருடிய செல்வி என்பவரை, போலீசார் கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.