இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வயப்பட்ட மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைனர் சிறுவன் கைது
Dec 1 2020 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சமூக வலைதளம் மூலம் அறிமுகமான மூன்றே நாளில், காதலனை தேடி சென்னையிலிருந்து திருவள்ளூருக்குச் சென்ற மைனர் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த மைனர் சிறுவனை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது. இன்ஸ்டாகிராமில் அறிமுகமான மூன்றே நாளில் காதலனை தேடி திருவள்ளூருக்குச் சென்ற சிறுமியை, காதலனும், அவரது நண்பரும் சேர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், சிறுவனைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும், தலைமறைவான சிறுவனின் நண்பரையும் தேடி வருகின்றனர்.