ராஜபாளையம் அருகே அடிப்படை வசதி கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்
Dec 1 2020 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜபாளையம் அருகே, மீனாட்சிபுரம் பகுதியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள், ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. வட்டாச்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பொதுமக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்காமல் கலைந்து சென்றனர்.