ஆம்பூரில் விவசாய நிலத்தில் இருந்த 9 அடி நீள மலைப்பாம்பை மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
Dec 1 2020 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் விவசாய நிலத்தில் இருந்த 9 அடி நீள மலைப்பாம்பை மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாச்சியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவரது நிலத்தில், 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அதனை பத்திரமாக பிடித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை வெள்ளக்கல் காப்பு காட்டு பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.