அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி அளிக்கப்படும் மருத்துவ இடங்கள் மற்றும் காலியிடம் ஏற்படும்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை - உயர்நீதிமன்றக் கிளையில் தமிழக அரசு தகவல்
Dec 1 2020 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி அளிக்கப்படும் மருத்துவ இடங்கள் மற்றும் காலியிடம் ஏற்படும்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாமல் ஒருவேளை இடங்கள் திருப்பி அளிக்கப்படும் பட்சத்திலும், காலியிடம் ஏற்படும்போதும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரவரிசை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.