வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி சென்னையில் மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மறியல்
Dec 1 2020 5:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே, பொது தபால் அலுவலக வாசலில் மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்தனர்.