டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
Dec 1 2020 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி 14-வது ஊதிய ஒப்பந்ததை இறுதிப்படுத்த வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, சென்னை பல்லவன் இல்லத்தில், போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த போராட்டத்தை தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் திரு.ஆறுமுக நாயினார், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், அவர்களுக்கு ஆதரவாக போக்குவரத்து தொழிற்சங்களும் போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்தார். போக்குவரத்து சங்கங்களை சீரழிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், 14-வது ஊதிய ஒப்பந்ததை இறுதிப்படுத்த தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.