தூத்துக்குடி அருகே மனைவி, குழந்தையை அடித்துக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Dec 1 2020 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அருகே, மனைவி மற்றும் 3 வயது குழந்தையை, கல்லால் அடித்துக்கொன்ற ஜவுளி வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மடத்தூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான சங்கர், கடந்த 2014ஆம் ஆண்டு, தனது மனைவி கோகிலாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவரை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்தார். மேலும், தனது 3 வயது குழந்தையையும் சுவரில் அடித்துக் கொன்றார். இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி பாண்டியராஜன், குற்றஞ்சாட்டப்பட்ட சங்கருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.