திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
Dec 1 2020 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, 6 வயது சிறுமியைக் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை, போலீசார் கைது செய்தனர். கொத்தக்கோட்டையில், வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 55 வயது முதியவரான ராமசாமி என்பவர், சிறுமியைக் கடத்தி, அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில், ராமசாமியைக் கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.