ஓசூரில் வீடு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
Dec 1 2020 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், வீடு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஒசூர் ராஜீவ் நகரில், கடந்த 2012ஆம் ஆண்டு, நாராயணமூர்த்தி என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர், கத்தியைக் காட்டி மிரட்டி, 9 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். விசாரணையில், சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர், கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, குற்ற வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஒசூர் சார்பு நீதிமன்ற நீதிபதி கலைவாணி, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.