திண்டுக்கல்லில் அ.ம.மு.க தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்பு - சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு
Dec 1 2020 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் அ.ம.மு.க தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில், ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.ராமுதேவர் தலைமையில் நடைபெற்றது. பூத் கமிட்டி அமைப்பது, தேர்தலில் பணியாற்றும் விதம், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, உறுப்பினர் சேர்க்கை, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகள் குறித்தும், கழக தேர்தல் அறிக்கையில் மக்களின் தேவைகளை குறிப்பிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், திண்டுக்கல் மண்டலப் பொறுப்பாளர்களான கழக தலைமை நிலைய செயலாளர் திரு. கே.கே.உமாதேவன், கழக அமைப்புச் செயலாளர்கள் திரு. ஐ.மகேந்திரன், திரு.ஆர்.தங்கதுரை, கழக ஆய்வு குழு உறுப்பினர்களான கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்கள் திரு. எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, திரு.என்.ஜி.பார்த்திபன், கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் இல.கதிர்காமு, கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.செல்வபாண்டி, கழக செய்தி தொடர்பாளர் திரு.வீர. வெற்றிபாண்டியன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு.ஜோதி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.