தூத்துக்குடியில் புயல் வெள்ள பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட 3,800 போலீசார் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
Dec 2 2020 10:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில், புயல் வெள்ள பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட 3 ஆயிரத்து 800 போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் புயல் வெள்ள பேரிடர் மீட்பு சிறப்பு பயிற்சி பெற்ற 130 காவலர்களும் தயார் நிலையில் உள்ளனர் என கூறினார்.