7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் செலுத்தாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இடம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்
Dec 2 2020 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
7 புள்ளி ஐந்து சதவீத இடஒதுக்கீட்டில் கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
சிதம்பரத்தை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், 7 புள்ளி ஐந்து சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்ததால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, 7 புள்ளி ஐந்து சதவீத இடஒதுக்கீட்டில், கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.