மதுரையில் தொடர் மழையால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை
Dec 2 2020 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தொடர் சாரல் மழையால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி பயிரிட்டு 30 நாட்களுக்கு பிறகு தக்காளி பழங்களை அறுவடை செய்ய தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக உசிலம்பட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகிவிடுவதால், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.