திருச்செந்தூர் பேரூராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி அ.ம.மு.க. சார்பில் மனு
Dec 2 2020 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் பேரூராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை விரைவாக சீரமைக்க கோரியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிறு-குறு வியாபாரிகளின் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க கோரியும் திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் இணை ஆணையரிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் திரு.பி.ஆர்.மனோகரன் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் திரு. இரா.ஹென்றி தாமஸ், கழக மீனவர் அணி இணைச் செயலாளர் திருமதி. சுகந்தி கோமஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.