புரெவி புயல் முன்னெச்சரிக்கை - கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தம்
Dec 2 2020 8:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக, கடலூரில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம், எம்ஜிஆர் திட்டு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலுக்குச் செல்லவில்லை. கடலுக்குச் சென்றிருந்த மீனவர்களும் புயல் எச்சரிக்கையால் கரைக்கு திரும்பி விட்டதால், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஆலப்பாக்கம், அய்யம்பேட்டை, புத்திரவெளி, பூச்சிமேடு, காயல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.