சிவகங்கை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - தேர்தல் அறிக்கை குறித்து கருத்துக்கேட்பு
Dec 2 2020 8:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன.
சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. அ.ம.மு.க தேர்தல் பிரிவுச் செயலாளர்கள் திரு.S.V.S.P. மாணிக்கராஜா, திரு.N.G.பார்த்திபன், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.கே.கே.உமாதேவன், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் திரு.
கா.டேவிட் அண்ணாதுரை, கழக அமைப்புச் செயலாளர் டாக்டர். இல.கதிர்காமு, கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரயில்வே திரு.S.பரமநாதன், கழக அம்மா பேரவைச் செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் திரு.தேர்போகி பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.