அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் எஸ்.ஜி. செங்கொடியான் உடலுக்கு கழக நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி
Dec 2 2020 8:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் எஸ்.ஜி. செங்கொடியான் உடலுக்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.எம்.ரெங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
புதுக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலாளரும், கழக அமைப்புச் செயலாளருமான எஸ்.ஜி செங்கொடியான் காலமானார். அவரது உடலுக்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.எம்.ரெங்கசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில்,கழக அமைப்புச் செயலாளர் திருமதி சாருபாலா தொண்டைமான், தஞ்சை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.ராஜேஸ்வரன், தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.சேகரன், இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு.பாலு, தொழிற்சங்க துணைச் செயலாளர் திரு.குணசேகரன், இலக்கிய அணி துணை செயலாளர் திரு.எஸ்.பி. சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர்கள் திரு.சிவசண்முகம், திரு.விடங்கர், திரு. கார்த்திக் .பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.