பாமகவினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Dec 2 2020 8:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிக்கையாளர் வாராகி என்பவர் தாக்கல் செய்த மனுவில், போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாமகவைச் சேர்ந்த பலர் வாகனங்களில் சென்னைக்கு வந்த போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் திரும்பிச் செல்ல கூறினர் - இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், பேருந்து, ரயில் மீது கற்களை வீசி பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.