திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் திருடனைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்
Dec 2 2020 8:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் திருடனை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவன், பேருந்திலிருந்து இறங்கும் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்றான். அங்கிருந்தவர்கள், ராஜாவை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அப்போது ராஜா, திடீரென தனது கையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதுடன், பிளேடை பிடுங்க முயன்றபோது, வாயில் போட்டு மென்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிளேடு துண்டுகள் அகற்றப்பட்டன. ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.