புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் : திருச்செந்தூரை சுற்றியுள்ள கடற்கரை கிராம மக்களுக்கு தண்டோரா - ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
Dec 3 2020 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 24 கடற்கரை கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 24 கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரை நிறுத்தியுள்ளனர். மேலும், திருச்செந்தூரில் தேசிய பாதுகாப்பு பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் அருகிலுள்ள அமலிநகர், ஆலந்தலை, வீரபாண்டியன்பட்டணம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்ட பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தண்டோரா மற்றும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க ஆலந்தலை, மணப்பாடு, கொம்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 18 மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.