தெற்கு அந்தமான் பகுதியில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Dec 3 2020 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்கு அந்தமான் பகுதியில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர், புரெவி புயல்களைத் தொடர்ந்து மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாகவுள்ளது. புரெவி புயல் பாம்பனை நெருங்கி வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள், புரெவி புயல் கரையை கடந்த பின்பு தெரியவரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.