நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2வது முறையாக உபரி நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
Dec 3 2020 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், முதல்கட்டமாக, ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாகும். ஏரியின் நீர்மட்டம் தற்போது 22 புள்ளி ஒன்று ஐந்து அடியாக உள்ள நிலையில், நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவலூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். நிவர் புயலின்போது திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி, இன்று 2-வது முறையாக திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.