புரெவி புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் -90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது
Dec 3 2020 6:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரெவி புயல் பாம்பன் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே, இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்டிருந்த புரெவி புயல், வடமேற்கு திசையை நோக்கி 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்தது. இன்று காலை, மன்னார்வளைகுடாவுக்கு 40 கிலோ மீட்டர் கிழக்கிலும், பாம்பனுக்கு 120 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும், கன்னியாகுமரிக்கு 320 கிலோ மீட்டர் வடகிழக்கிலும் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் பாம்பன் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே, இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 70-80 கி.மீ வேகத்தில் வீசுகிறது. 90 கி.மீ வேகத்தில் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. தற்போது மணிக்கு 16கிமீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது மேலும், தமிழகத்தில் தென் கடலோர பகுதிகளான பம்பன் - கன்னியாகுமரி இடையே இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் புரெவி புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.
காரணமாக தென் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் தொடங்கி 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானியை ஆய்வு மையம் தென்மண்டல தலைவர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.