ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
Dec 3 2020 9:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரெவி புயல் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், இன்று இரவு பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளளது. அத்தியாவசிய தேவையின்றி பிற பணிகளுக்கு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.