செங்கல்பட்டில் கழிவுநீர் தேங்குவதால் மிகுந்த சிரமம் : மருத்துவ பணியாளர்களே ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவுநீரை அகற்றினர்
Dec 3 2020 9:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கான குடியிருப்பு பகுதி அருகே, பல மாதங்களாக தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற, மருத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், பணியாளர்களே ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மருத்துவ நிர்வாகத்தின் அலட்சிய போக்கால், பணியாளர்களின் குடியிருப்பு பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற, பாதாள சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.