வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் : திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தினர் கொட்டும் மழையில் போராட்டம்
Dec 3 2020 9:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சியில், இந்திய மாணவர் சங்கத்தினர் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர். தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தின்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. வேளாண் சட்டம் திரும்பப் பெறும்வரை, ஒவ்வொரு நாளும் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.