திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் : அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது
Dec 3 2020 9:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. நீர்பிடிப்புப் பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, ஜல்லி முத்தான்பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனிடையே, கோயில் நிர்வாகத்தினரும், வனத்துறையினரும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.