தொடர் புயுல் எதிரொலி : 10 நாட்களாக கடலுக்கு செல்லாத கடலூர் மீனவர்கள் - வருமானமின்றி தவிப்பதாக வேதனை
Dec 3 2020 9:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரெவி புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் புயல் காரணமாக, சோனாங்குப்பம், பெரியகுப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி, சொத்திக்குப்பம், ராசாபேட்டை, எம்.ஜி.ஆர்.திட்டு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக, மீன்பிடித் தொழில் மற்றும் அதனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 2 லட்சம் பேர் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.