கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜா கண்டிகையில் தரைப்பாலத்தில் சிக்கிய மினி லாரி - 4 பேர் பத்திரமாக மீட்பு
Dec 3 2020 9:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜா கண்டிகையில் தரைப்பாலம் வழியாக சாலையை கடக்க முயன்ற மினி லாரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுனர் தடையை மீறி சென்றதால் மினி லாரியில் வந்த ஓட்டுநர் உள்பட 4 பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பின்னர் தகவலறிந்து வந்த சித்தராஜ கண்டிகை இளைஞர்கள் ஒன்றிணைந்து கயிற்றின் மூலம் சாதுரியமாக அவர்களை காப்பாற்றினர்.