புரேவி புயலால் தொடர் மழை, சூறாவளி காற்று காரணமாக வெறிச்சோடிய ராமேஸ்வரம்
Dec 3 2020 9:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரேவி புயலால் தொடர் மழை, சூறாவளி காற்று காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் தற்போது வெறிச்சோடியது. உலகப் புகழ்பெற்ற புனித நகரமான ராமேஸ்வரத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய நிலையில் இன்று புயல் காரணமாகவும் கனமழை சூறாவளி காற்று காரணமாகவும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. கடைகள் திறக்கப்படாததால் முழு அடைப்பு போன்று காணப்பட்டது.