தஞ்சையில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் - டான்ஜெட்கோ தலைவர் உள்ளிட்டோருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Jan 13 2021 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சையில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில், டான்ஜெட்கோ தலைவர் உள்ளிட்டோர் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் பகுதியில், உயர் அழுத்த மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில், பேருந்தில் பயணம் செய்த 4 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ள மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன், டான்ஜெட்கோ தலைவர் மற்றும் தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.