வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழா - பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளிப்பு
Jan 14 2021 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
பொங்கல் திருநாளையொட்டி, அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகில், எருது விடும் விழா, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. விழாவைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டனர். வீரர்கள் உறுதியேற்ற பின்னர், வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்தன. எருது விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.